காற்றின் சேலை நுனியில் அவனுக்கான பூக்கள்
உதிர்ந்த மிச்சத்தில் அவன் எழுதத் தொடங்கினான்.
அப்போது சகாராவில், அவன் தலைக்கு மேல் நின்று கொண்டு
பச்சை தேவதைகள் வேடிக்கை பார்க்க நேர்ந்தது.
இந்தக் கிரகனத்தில்...
அசரீரீகள் இவனுக்கும் புரியக் கூடாதென்று
ஏதோ ஒன்றை சொல்லி விட்டுப் போனது.
ஒரு வரிக்குதிரையின் குழம்படிகள் உரித்து
ஒரு கருங்கல்லைக் குடித்ததை உணரும் நிலை
அவனுக்கில்லை.
இதய விக்கிப்பீடியாவில் பதிவுசெய்வதற்கென்று
கோணங்கிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
- சந்திரபால் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment