வார்த்தை நுனியில்
முகம் பார்க்கும்
கடித வரிகள்…
அலைகளின் ஈரம்
இருதயக் குழியில் விழுந்த கணம்
எத்தனை ஓல்ட்
என்று அளந்து விட கருவிகளில்லை.
யுகமகள் சிரித்து
முடிக்க
பிரளயங்கள்
தேவாங்குகளாக பொறுமை காத்தன.
ஆயிரம் இரவுகள்
எச்சில் விழுங்கிய சத்தத்தில்
மனம் பொத்தி
முடியாத தருணங்களில் ஏக்கத்தில் இருந்தன.
வார்த்தைகளுக்கு
மொழிகள் ஒன்று கூடி முடிவெடுத்தன.
காடுகள் வளந்து
பனித்துளிக்குள் சகாராவை மூழ்கடிக்க
நாயகனும் நாயகியும்
ஆசைப்பட்டார்கள்.
- சந்திரபால் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment