பைத்தியக்காரர்களாக
நின்றார்கள் ; நடந்தார்கள்.
புராணீகங்களில்
வகுத்த தடத்தின் வரிசையில் நின்றார்கள்.
சகாராவின் பொதுவில்
வைத்த இசைத்தட்டில்
ஓடி விழுந்து
நொறுங்கினார்கள்.
சில நூற்றாண்டுகளாக
வேடிக்கைப் பார்க்கப் பழக்கப்பட்டான்.
தோல்வியின்
விம்மலும் விம்மலில்
வெற்றியென்று
கைதட்டலும் அவன் புனைவில் நையாண்டிகள்…
ஒழுக்க விதிகளின்
கந்தகத்தில் எரிந்தார்கள்.
சில நொடிகள்
மட்டும் கக்கத்தில் இருந்தார்கள்.
கைகுலுக்கினார்கள்
, - ஆனால்
சமுகவியலின்
கண்ணாடி வயலில் நீச்சல் தெரிந்தும்
ஒரு கருங்கல்லை
இறுக்கி கழுத்தில் கட்டிக் கொண்டார்கள்.
சாவு மேளத்தின் தாளகதியைச் சிதைத்து
பிணத்தின் உறக்கத்தைச்
சபித்தார்கள்.
- சந்திரபால் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment