புதிய இயக்குநர்களுக்கு ,
அவர்கள் எடுக்கும் குறும்படங்கள் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன .
இரண்டரை
மணிநேரத் திரைப்படத்திற்கு , ஒரு முன்னோட்டமாகவே வளர்ந்து வரும் இயக்குநர்கள் ,
குறும்படங்களை இயக்குகிறார்கள் .
திரைப்பட உலகில் இயக்குநராக
வலம் வர துடிக்கும் இளைய தலைமுறைகள் தாங்களாகவே முயன்று அத்தனை செலவுகளையும்
சமாளிகத்துக் கொண்டு, 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடங்கள் வரை குறும்படங்களை
எடுக்கிறார்கள் .அதனால் குறும்படத்தின் திரைக்கதையில், கதை - மையம் – சூழல் என்று
, எல்லாம் ‘பட்ஜெட்டுக்கு’ ஏற்ற வகையில் வடிவமைக்க வேண்டியது
அவசியமானதாக இருக்கிறது .
ஒரே ஒரு மையத்தை வைத்துக்
கொண்டு , தொடக்கம் – முடிவு –உச்சம் என்று குறும்படங்கள் அழுத்தமான பதிவுகளோடு
செய்தி சொல்கின்றன. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதே , பாடத்திட்ட
ஆய்விற்காக மாணவர்கள் குறும்படங்களை எடுத்துக்காட்டுகிறார்கள் . அதில் வியக்கதக்க
பரிசோதனை முயற்சிகளில் இறங்குவது , ஒரு பக்கம் இருந்தாலும் , விளையாட்டுத் தனமாக
சாதாரணக் காமிராக்களை வைத்துக் கொண்டு , கேலிக்கூத்தாகவும் குறும்படங்கள் என்ற
பேரில் மாணவர்கள் எடுக்கிறார்கள் .
100 குறும்படங்களில் 10
லிருந்து 15 குறும்படங்களே வெற்றி பெறுகின்றன .
இதிலிருந்தே , திறமையான
இயக்குநர்களை யாரென எளிதில் தெரிய வருகிறது . குறும்படங்களை ஊக்கப்படுத்துவதற்காக
தமிழ் நாட்டில் இயங்கி வரும் பயிற்சிப் பட்டரைகளில் , நிகழ் மற்றும் நிழல் ,
காட்சிப்பிழை போன்ற திரைப்படம் சம்பந்தமான பத்திரிகைகள் உலக சினிமாக்களைப்
பற்றியும் குறும்படப் போட்டிகளைப் பற்றியும் விவாதித்து வருகின்றன . தொடர்ந்து
மாதத்தில் ஒரு முறையோ , அல்லது இருமுறையோ நாடகம் மற்றும் சினிமா குறித்த திரை
மேதைகளை அழைத்து விவாதங்கள் நடத்தி வருகிறார்கள் .
“நாளைய இயக்குநர்” என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி
நடத்தி வருகின்ற குறும்படப் போட்டி , வாரம் ஒருமுறை நல்ல வரவேற்பைப் பெற்று
வருகிறது . இம்மாதிரியான வாய்ப்புகளின் மூலம் திறமையான - வளரும் இயக்குநர்கள்
வெகுஜன உலகில் தங்களுக்கான இடத்தை தேர்தெடுத்துக் கொள்கிறார்கள் . மேலும் ,
கல்லூரி மற்றும் ஊடகவியல் வட்டாரங்களால் நடத்தப்படும் கலை விழாப் போட்டிகளில் ரூ .
250 வரை முன்பதிவாகச் செலுத்திக் கலந்து கொள்கிறார்கள் .
சிறந்த
குறும்படங்களுக்குப் பிரமாதமான விருதுகளைக் கொடுத்து குறும்பட இயக்குநர்களைக்
கௌவரப்படுத்துகிறார்கள் .
வளரும் இயக்குநர்கள் ,
தங்கள் முதல் இரண்டு மூன்று படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுத்து விட்டு அதன்
பிறகு வரும் படங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறார்கள் . அதற்குக் காரணம் பல நாள்
உழைத்து முழு திறமையும் போட்டு எடுத்த தொடக்க கால படங்களைப் போல , வளரந்த பிறகு
எடுத்த திரைப்படங்களை அமைந்து விடுவதில்லை .
பசியில் இருக்கும்
பார்வையாளன் , கிடைத்ததைச் சாப்பிட நினைக்கும் தருணங்ரகளில் சுவையற்ற சில
படங்களும் வெற்றிப்படங்களாகப் பார்க்கப்படுகின்றன .
இந்தக் குறும்படங்களின்
மூலம் திரை உலகில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர்களுக்கு நல்ல எதிர்காலம்
இருக்கின்றது . மேலும் "எதார்த்த மீறல்கள்" கொண்ட படங்கள் தோலிவியைத்
தழுவி நிற்கின்றன .
வெறும் நடப்பிலை மட்டுமே
மையப்படுத்தி இயக்கப்படும் படங்களும் , முழு நேரப் படங்களாக
எடுப்பட்டுத் தோல்வியடைகின்றன .
மேற்கத்திய மரபைத் தழுவி
முழுக்க முழுக்க கற்பனையில் படமெடுக்க இங்க முதற்கட்ட முயற்சிகள் கூட இன்னும்
எடுக்காதது தான் வருத்தம் .
குறும்படங்கள் இயக்குநராக
வருவதற்கு ஒரு சாட்சி சொல்கின்றன , அதுவே நிரந்தரத் தீர்வாகவாகிவிடாது .
– சந்திரபால் .
No comments:
Post a Comment