[வினோதினி என்ற பெண்ணுக்கு
ஆஸிட் ஊற்றப்பட்டு இறந்தவுடன் அடுத்த மாதமே வித்யா என்ற ஒரு பெண்ணும் ஆஸிட்
வீச்சில் இறந்தார். அச்சமயத்தில் நான் எழுதிய கவிதை இது . இனி அந்தக் கொடுமை நடக்க கூடாது . இந்தக்
கவிதையை அதற்காக இன்னொரு முறை படித்துப் பாருங்கள் .]
ஆஸிட் வேண்டுமா
ஆளுக்கு ஒரு கப் ஆஸிட் வாங்கிக்
கொல்லுங்கள் .
முகம் வெந்து சதை ஒழுகிப் போன
வினோதினிகள்
ஒவ்வொரு நாளும் கதறுகின்றன .
பெற்றவர்களை - உடன்
பிறந்தவர்களை
ஞாபகங்கக் கிடங்குகளில் அடைத்து
துன்புறுத்துகின்றன .
கொஞ்சி முத்தமிட்டு நடைபழக்கிப்
பார்த்து பார்த்து வளர்த்த
முகமும்
கடைசியாகப் பார்த்த முகமும்
நினைவுகளில் விஷம் தடவிக்
கொல்லுகின்றன .
“அட போங்கப்பா
யாருக்கு நாங்க என்ன செஞ்சோம்
….!
கோயில் கொளம் எல்லாம்
எதுக்குப்பா….?
இப்ப அவனுக்கு சந்தோஷமா ….!
அவனுக்கு ,
மணியடிச்சா மூனு நேரமும் சோறு
கெடைக்கும் !
நாங்க எப்படிபா வாழ்றது” ..?
எத்தனை கனவுகள் …
பிழைத்தும் என்ன செய்ய முடியும்
..?
சாகும் வரை சாவுதான் ….
முன் ஜென்மத்தில்
நம்பிக்கை வைத்து தேற்றிக்
கொள்வதா …!
நீங்கள் அதை பற்றியெல்லாம்
கவலைப்படாதீர்கள் !
ஆளுக்கு ஒரு கப்
ஆஸிட் வாங்கிக் கொல்லுங்கள் .
உங்களுக்கு யாரைப் பிடிக்க
வில்லையோ
அவர்களின் முகத்தில் ஊற்றுங்கள்
முடியவில்லையென்றால்,
வித்யாவுக்கு ஊற்றியது போல
முதுகில் ஊற்றுங்கள்
ஆஸிட்டில் நனைந்த உடலை
கிருமிகள் மெல்லும் .
சதைகள் கரைந்து கருப்பு ரத்தமாக
வடியும்
மரணத்தின் கதவுகள் திறந்து
இந்த சமுதாயமே சேர்ந்து
புடனி பிடித்து்தள்ளும் போது
என்ன செய்ய முடியும் …!
அப்படியென்ன உணர்ச்சி…?
அப்படியென்ன காதல் …?
அவர்கள் சேர்ந்திருந்தாலும்
இதுதான் நடந்திருக்கும் .
ஆஸிட்டில் வெந்து போன வினோதியின்
தந்தை
வித்யாவுக்கு வைத்தியச் செலவு
பார்த்ததெல்லாம்
சாதாரணமானதல்ல .
உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் !
ஆளுக்கு ஒரு கப்
ஆஸிட் வாங்கிக் கொல்லுங்கள் .
உங்களுக்கு
மரண தண்டனை –
சித்திரவதையெல்லாம் இல்லை .
காதல் திருமணங்கள் பற்றிப்
பேசுபவர்கள்
உங்களால் மேடையில் பிரமாதமாகப்
பேசுவார்கள் .
ஆமாம் சொல்ல மறந்து விட்டேன் .
எதற்காக
பேப்பரில் – டீவியில்
பார்த்துத் தெரிந்து கொள்ள
வேண்டும் …!
வீட்டில் அக்கா , தங்கை
இருந்தால்
அவர்கள் முகத்தில் ஊற்றிப்
பக்கத்திலிருந்தே பாருங்கள் .
இன்னும் நீங்கள்
திடமானவர்கள் என்றால் ,
வினோதினியின் குடும்பத்தோடும்
வித்யாவின் குடும்பத்தோடும்
ஒரு நாளு முழுக்க தங்கிருந்து
பின் வாருங்கள் .
அதன் பிறகு
ஆளுக்கு ஒரு கப்
ஆஸிட்டு வாங்குங்கள்
வாங்கினால் ,
உங்கள் முகத்தில் நீங்களே ஊற்றித்
தினமும் உற்றுப் பாருங்கள் .
-சந்திரபால் .
No comments:
Post a Comment