Friday 28 June 2013

சித்தர்களின் வெளி .

நினைவுகள் நுரை தள்ளி  
இரவைக் கிழித்துத் தொங்கவிடும் பிம்பங்கள்
சலங்கை கட்டி ஆடுகின்றன.

உயிர் அனத்தித் துடியாய் துடிக்கின்றது
மாயைச் சிலந்தியாக மனம் தப்பிக்க வழியிருந்தும்
சுருண்டு கத்தையாக வழிகின்றது.

வழி துணை இழந்த நடுப்பாதையில்
வலக்கையிலும் இடக்கையிலும் மாறி மாறித் திரும்பி
ஊர்வலத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அலறுகின்றன

முகம் வெளிரிய வார்த்தைகள்

ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்
தேதிகளிட்டு வக்கிழந்த சாயத்தில்  
உச்சரிப்பின் முடிவுகளில் எச்சிலூறுகின்றன.
மரியாதை நிமித்தமாக வேஷமிடுகின்றன
தெளிவற்ற தூரங்களில்
உடைந்த கால்களோடு பயணிக்கின்றன

பறவைகளின் ஒலி அதிரவுகளில்
சங்கதிகள் எழுதிய கமகத்தில்
இவர்களின் சிரிப்புகள் கூட ஏதோ இரைச்ச லெனப்பட்டது.

இருளுக்குள் பதுங்கிய மௌனத்தின் மீது 
டார்ச்  அடித்து விளையாடுவார்கள்
சித்தர்களின் மனவெளி வேண்டி
கெஞ்சுகிறேன் அதனாலும் உருகும் என் தொனி. 

-சந்திரபால் .

No comments:

Post a Comment