எங்கிருக்கிறார் இந்தக் கடவுள் ....?
ஏனிந்த சனங்களுக்கு இந்த நிலை ...?
மதங்கள் கூட்டி கேட்கலாமா...?
பகுத்தறிவாதிகளைத் திரட்டி பேசலாமா ....?
அளந்து வைத்த அறிவின் எல்லையைத் தான் மனிதன் தொட முடியுமோ !
எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால்
இங்கு வாழ வழியேது …. ?
அனுதாபப்பட்டு என்ன மாற்றம் வரும் !
இருத்தலியல் தோற்றுப் போகும் என்று யாரோ சொன்னது
எப்போதும் எனக்கு மறக்காது !
- சந்திரபால்
.
No comments:
Post a Comment