பொய்களின் வேர்கள் அதல பாதாளங்களில் பின்னிக் கிடக்கின்றன.
குற்றத்தின்
உடலை அணிந்திருக்கும் என் பார்வைகள்
குப்பைகளை என்
மனதில் வந்து கொட்டுகிறது .
கங்காருவின்
பிள்ளை போல நினைவுகள் உயிரைக்
கட்டிப் பிடித்திருக்கின்றன .
யார் யாரோ வந்து
போகிறார்கள் ….!
இலவசமாக தத்துவம்
பேசுகிறார்கள் ….!
நான் இல்லையென்றதும்
அவர்களின் எரிமலைகளை
எனக்காக பற்றவைக்க
சிரமப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment