உயிரின் பதிவுகளாகத்
திசைதடுமாறிப்
பதைத்துத் திகைத்து
உருண்டு புரண்டதில்
பாகாய் உருகிய
துப்பல்களும்
அதன் அதீதங்களும்
நீர்க்குமிழ்களாகப் பழங்கதையடித்ததன.
விம்மி விம்மி
நொதித்த மனம்
தகிக்க முடியாத
பிதற்றல்கள் மரணித்திருப்பதாய்
சட்டென்று தணிந்து
சாமரம் வீசிட
நந்தவனப் பூக்கள்
திறக்க செந்தேன் அமுதம் சொட்டி
துளித்துளியாக
விவரிக்கிறது - தன்
சாதாரண நிமிடங்களின்
அந்தரங்கத்தை......
- சந்திரபால் .
No comments:
Post a Comment