Wednesday 19 June 2013

மறுயுகப் பயணம்



நீ தந்த உலகங்கள்
பீலிகளாக மாறி
எனக்கு வகுப்பு எடுக்கின்றன.

சத்தமில்லாம் அழச் சொல்கின்றன…

ஒரு பட்டாம் பூச்சியின் எலும்பு முறிவாக
அமர்ந்திருக்கிறேன் .

என் மௌனத்தின் நரம்புகளை
உனக்கு மட்டும் தானடி இசைக்கத் தெரியும்!  

என்னை சீன மூங்கிலாகத் 
துளை செய்தவள் நீ தானடி!

ஜீவ நுரையில் மாண்டு கிடக்கின்றன
என் ஒலிப்பரல்கள் .

இந்தப் பயணத்தில் நானொருவன் மட்டும் நடந்து போகிறேன் . 

- சந்திரபால்

No comments:

Post a Comment