Friday 14 June 2013

ஆனால் இவர்கள்



இவர்கள்
பிளாட்டின வார்த்தைகளில்
பேசுவார்கள் .

பிளாட்பார மனிதர்களின்
ஒரு வருட உழைப்பை ஒரு நாளுக்குள்
வாழ்ந்து தீர்ப்பார்கள் .

கையசைத்தால்
ஆயிரம் கார்களையும் பங்களாக்களையும்
வைத்திருக்கும் இவர்கள்
சந்தையைக் கோடிக்கணக்கில் தான்
பேரம் பேசுவார்கள் .

நல்ல முகமூடிகளை மாட்டிக்கொள்வார்கள் .

உடம்பு தளர்த்தி
இவர்களை வணங்குவார்கள் மக்கள் .

ஆனால் இவர்கள்
கடன் பட்டுச் சாவார்கள்.

கொட்டும் மழையில்
தனியாக எரிந்து கொண்டிருபார்கள் .

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு .  

- சந்திரபால் .
 

No comments:

Post a Comment