இவர்கள்
பிளாட்டின
வார்த்தைகளில்
பேசுவார்கள்
.
பிளாட்பார
மனிதர்களின்
ஒரு வருட
உழைப்பை ஒரு நாளுக்குள்
வாழ்ந்து
தீர்ப்பார்கள் .
கையசைத்தால்
ஆயிரம்
கார்களையும் பங்களாக்களையும்
வைத்திருக்கும்
இவர்கள்
சந்தையைக்
கோடிக்கணக்கில் தான்
பேரம்
பேசுவார்கள் .
நல்ல
முகமூடிகளை மாட்டிக்கொள்வார்கள் .
உடம்பு
தளர்த்தி
இவர்களை வணங்குவார்கள்
மக்கள் .
ஆனால் இவர்கள்
கடன்
பட்டுச் சாவார்கள்.
கொட்டும்
மழையில்
தனியாக
எரிந்து கொண்டிருபார்கள் .
ஒவ்வொரு
வினைக்கும்
எதிர்வினை
உண்டு .
- சந்திரபால் .
No comments:
Post a Comment